Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

ஹாய் பிரண்ட்ஸ், இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் கொண்டு அனைவருக்குமே பெரும் பிரச்னையா இருப்பது உடல் பருமன் தான். அதிலும், அடிவயிற்றில் சதைப்பிடிப்பு அதிகமாக இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். தொப்பையால் தங்கள் அழகு கெட்டுவிட்டதே என்று பல பெண்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
வாசகி ஒருவர், திருமணமாகாத தனது மகள், உடல் எடை அதிகரிப்பதற்காக அதிகமாக சாப்பிட ஆரம்பித்தாள்; ஆனால், அவள் எடை கூடவில்லை. மாறாக, அவளது அடிவயிற்றில் மட்டும் அதிமாக சதை வைத்து தொப்பை விழுந்து விட்டது. அவளது தொப்பையைக் குறைக்க ஏதாவது வழி சொல்லுங்களேன் என்று கடிதம் எழுதியிருந்தார். உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றுவதன் மூலம் <உடல் எடையைக் குறைக்கலாமே ஒழிய தொப்பையைக் கரைக்க முடியாது.
தொப்பையால் வயிற்றில் சதைப்பகுதி கொஞ்சம் தளர்ந்து விடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும் கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்தவழி.
வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மற்றபடி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது. எனவே, தினமும் காலை, மாலை வேளையில் ஒரு கிலோ மீட்டர் தூரமாவது நடப்பது உடலுக்கு நல்லது. அதிலும், காலையில் நடப்பது நல்ல பலன் தரும். அதேபோல், இரவு உணவிற்கு பிறகு நடப்பது நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும்.
உடல் எடைக் குறைய…
* தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
*சீசனல் ப்ரூட்ஸ் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.
*பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்து சாப்பிடலாம்.
* முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.
* இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.
* வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.
ன்னடா இது இப்படி தொப்பையோட, குண்டா இருக்கோமே அப்படின்னு கவலைப்படுறத விட்டுட்டு, பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் மாஸ்டர் என தகுந்த நபர்களிடம் உரிய ஆலோசனை பெற்று, வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!
1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும்கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.
2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!
6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.
ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.
நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!
7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும். மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு. எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!
clip_image002உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது போலவே, நம் கண்களின் ஆரோக்கியமும் மிக முக்கியமாகும். கண்களைப் பராமரிப்பதற்கும், அவற்றை பாதுகாத்துக் கொள்வதற்கும் சில வழிமுறைகளைக் காண்போம்.
கண்கள் பொன்னை விட மதிப்பானவை. அவற்றை பராமரிப்பதற்கும் நாம் நேரத்தைச் செலவிட வேண்டியது அவசியம். சுத்தம், உணவு, சரியான நேரத்தில் பரிசோதனை, உடற்பயிற்சி போன்றவற்றால் நம் கண்களுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
உணவில் கவனம் தேவை..!
* வாரம் இருமுறை உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது, முதுமையில் ஏற்படும் பார்வை பிரச்சனைகளை தடுப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றது.
* சர்க்கரைவள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்வதினால், அதில் உள்ள 'வைட்டமின் ஏ' கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
* உணவில் உப்பின் அளவை குறைப்பது அவசியம். டின்னில் போட்டு வைக்கிற ஊறுகாய்,   தின்பண்டங்கள் போன்றவற்றை வாங்கும்போது, அவற்றில் 'நோ சால்ட்', 'நோ சோடியம்' லேபிள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
* வைட்டமின் ஏ அடங்கிய பழங்களையும், தயிரையும் காலை உணவில் செர்த்துகொள்வதனால் முதுமையில் கண்களில் ஏற்படும் பார்வைக் கோளாறைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
* பழங்களைக் கொண்டு பதப்படுத்திய ஜாம் சாப்பிடுவதால், முதுமையில் கண்களின் திரையில் ஏற்படுகின்ற பிரச்னையை தடுக்கலாம்.
* பால், மீன், முட்டைகோசு, கேரட், கீரை, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அடங்கியிருக்கின்றது. அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது முதுமையில் கூட எவ்வித கோளாறுமின்றி கண்கள் நலமுடன் இருக்கும். குறிப்பாக, குளுகோமா நோயைத் தவிர்க்கலாம்.
* வருத்த உணவு பொருட்கள், இனிப்புப் பண்டங்கள் போன்றவை வயதானவர்களின் பார்வை கோளாறுக்கு முக்கிய் காரணமாகிறது. எனவே, இந்த உணவுப் பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.
* அன்றாட உணவில் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், இதில் குளுகோமாவை எதிர்க்கும் ஆன்டியாக்சிடன்ட் மிகுதியாக உள்ளது.
* வாரம் இரண்டு நாட்களில் மீன் உணவு சாப்பிட வேண்டும். மீனில் இருந்து உடலுக்கு தேவையான 'ஒமேகா 3 பாடி ஆசிட்' கிடைக்கின்றது. நீங்கள் சைவ உணவை மட்டும் உட்கொள்பவராக இருந்தால், இதற்கு பதிலாக மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிட்டால் போதுமானது.
உடற் பயிற்சியும் உடற் பரிசோதனையும்
* வாரத்தில் ஐந்து நாட்களில் அரை மணி நேரம் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். இது, குளுகோமா கோளாறு உண்டாவதைத் தடுக்கிறது.
* தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஐந்து நிமிடம் கண்களுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது. கண்களை இடது - வலது புறமாகவும், மேலே - கீழேயும் அசைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். இப்படி செய்வதால் குளுகோமா கோளாறு வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
* 50 வயதைத் தாண்டியவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் கூடுதலாக இருக்கின்றவர்கள் எல்லா மாதமும் பரிசோதனை செய்து மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம்.
* சூரிய வெளிச்சத்தில் இருந்து கண்களுக்கு உண்டாகிற வறட்சியால் கண்களைப் பாதுகாப்பதற்காக சன் க்ளாஸ் அணிந்து கொள்ளலாம்.
* நீச்சல் செய்யும் போது கண்ணாடி அணிய வேண்டும். ஏனெனில், இது குளோரினில் இருந்து கண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.
* பயணம் செய்யும் போது கண்ணாடி அணிந்து கொண்டால், கண்களை தூசி, புகை போன்றவற்றில் இருந்தது பாதுகாத்துக் கொள்ளலாம்.
* சூரிய வெளிச்சத்தில் இருக்கிற புற ஊதாக் கதிர்கள் கண்களில் படாமல் இருக்க, பெரிய தொப்பியை தலையில் அணிவது நல்லது.
* வேலை செய்யும்போதும், படிக்கும் போதும் அரை மணி நேரம் இடைவெளியில் தூரமாக இருக்கின்ற பொருட்கள் மீது பார்வையைச் செலுத்தி, 30 நொடிகள் ஓய்வு கொடுக்க வேண்டும்.
* மல்லிகை பூ, பெப்பர்மின்ட், வெணிலா போன்ற இயற்கையான வாசனை திரவியங்களை அவ்வப்போது. இது, மூளை நன்றாக வேலை செய்வதற்கும், மங்கலான வெளிச்சத்தில் நன்றாக பார்ப்பதற்கும் நமக்கு பயன்தருகிறது.
* ஏ.சி, வெண்டிலேட்டர் போன்றவற்றை முகத்துக்கு நேராக வைப்பதைத் தவிர்க்கவும். இவை கண்களுக்கு மிகவும் கெடுதலாகும்.
* கண்களை சில மணி நேரம் இடைவெளியில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படிச் செய்வதால் கண்களுக்குப் புத்துணர்வாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் கண்களில் தூசி, அழுக்கு போன்றவை பதிந்துவிடாமல் தடுக்கின்றது.
* தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு போடப்பட்டிருந்த மேக்கப்பை அழிக்கவும். கண்களைச் சுத்தப்படுத்திய பிறகே தூங்கச் செல்ல வேண்டும்.
* சுத்தமான டவல் உபயோகிப்பது நல்லது. வேறொருவர் பயன்படுத்திய டவலை உபயோகப்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இத்தகைய எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், கண்கள் இரண்டும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
young_man_and_old_manஇளமை என்பது வயதல்ல. மனநிலை.
தங்கள் இலட்சியங்களைக் கைவிடுபவர்களுக்கே வயதாகிறது.  இலட்சியங்களை இளமையாக வைத்திருப்பவர்கள், எப்போதும் இளமையாய் இருக்கறார்கள்.
நம்பிக்கை, முயற்சி, உறுதி இவையெல்லாமே இளமையின் அடையாளங்கள். திறந்த உலகின் உற்சாகச் செய்திகள் உங்களை வந்தடைந்தால் நீங்கள் இளமையய் இருப்பதாய் ‍அர்த்தம். ஒரு செய்தியும் வந்தடையாமல் உள்ளம் மூடியிருந்தால் வாழ்க்கையை விட்டு விலகி நிற்பதாய் ‍‍‍அர்த்தம்.
View this file click here