அன்பை முகத்தில் வை!
ஆசையை அளவில் வை!
இனிமையை பேச்சில் வை!
ஈகையை கையில் வை!
உண்மையை சொல்லில் வை!
ஊக்கத்தை உழைப்பில் வை!
எண்ணத்தை எழுத்தில் வை!
ஏற்றத்தை மனதில் வை!
ஐயத்தை விலக்கி வை!
ஒழுக்கதை உள்ளத்தில் வை!
ஓடமாய் உள்ளத்தை வைக்காதே!
ஒளவியம் எள்ளளவும் வைக்காதே!
அஃதே உன் கொள்கையாய் வை!