வாழ்க்கை ஓர் அனுபவப்பாடம்

வாழப் பழகுவதா? இதென்ன வேடிக்கை! நாமெல்லாம் ஏற்கனவே வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம்?
இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் 06102008241இப்படியொரு கேள்வி நம் மனத்தில் எழத்தான் செய்யும்.
நியாயமான ‍கேள்விதான். நாமெல்லாம் உயிரோடு தினமும் உலாவிக்கொண்டுதான் இருக்கிறோம்.
இளமைப் பருவத்தை ஆட முடிந்தவரை ஆடிக் கழிக்கிறோம். பொறுப்பு வந்த பிறகு பிழைப்புக்கு வழிதேடி அலைகிறோம்.
முடிந்தவரை ‍‍‍‍எல்லா நேரத்தையும் ஊர்க்கதை பேசிக் கழிக்கிறோம். கிழடு தட்டிப் போய்ப் போக வேண்டிய இடத்துக்கும் அவசரமாகவே போய்ச் சேருகிறோம், பல நேரங்களில் நாமே வரவழைத்துக் கொண்ட நோய்களால்!
இது ஒரு வகைச் சுய விமர்சனம்தான்! கொஞ்சம் கடுமையான சுயதரிசனம்! நெஞ்சைத் தொட்டுப் பார்ப்போம்.
நம்மில் எத்தனைபேர் தினமும், ஒவ்வொரு நொடியும் மனநிறைவோடு வாழ்கிறோம்?
நம்மில் எத்தனைபேர் தினமும் நமது முழுத்திறமையையும் பயன்படுத்தி உழைக்கிறோம்? வெற்றி பெறுகிறோம்?
நம்மில் எத்தனை பேர் குடும்பம், சமூக உறவுகளை நிறைவாகக் கவனமாகப் பாதுகாக்கிறோம்?
இனியாவது வாழ வேண்டாமா?
பல்லாயிரம் ஆண்டுகளாகச் சமயங்களும் இலக்கியங்களும் இத்தகைய வழிமுறைக‍ளைச் சொல்லி வந்திருக்கின்றன.
இன்று வாழ்வுக் கலை ஓர் அறிவியல் பார்கையுடன் துல்லியமாக வளர்ந்து கொண்டு வருகிறது.  நாள்தோறும் ஏராளமான செய்திகள்! ஆய்வுகள்! கட்டுரைகள்!
இவை எல்லாவற்றையும் விலாவாரியக எழுதுவது எனது நோக்கமன்று.
அவற்றை விழுந்று விழுந்று படிக்கிற ஆர்வமோ, அதற்கான நேரமோ கூட நமக்கு இருக்கிறதா, என்ன?
உண்மையில் நமது வாழ்க்கையில் சில மிக எளிமையான நல்ல பழக்கங்களை, நடைமுறையில் கற்றுக் கொள்வதன் மூலம் சிறப்பாக மாற்றிக் கொள்ள நம்மால் முடியும்.
---------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment